உணர்வுகளைத் திசை திருப்பி அங்குமிங்குமாக அழைக்கழிக்கின்றது சுவாலையின் சுடர் நாக்குகள்.- இரவினது மிக மிருதுத்தன்மை- நித்திரையின் நிலைப்படிகளின் இருபுறமும் மெழுகுவர்த்திகளை அந்தம் பிடிக்கின்றது. காதல் போன்ற கனமற்ற ஒரு வார்த்தை நம் இருவரின் காதுகளிலும் குளிர்க் காற்றுடன் மோதுகிறது . தந்தத்தில் செய்யப்பட்ட புத்தனின் மோன நிலை வறட்சியான மேகத்திலிருந்து அடர் மழை பெய்கிறதைப் போல கனத்தது . மொழிகளைப் பரிமாறாத சிலைகளிலிருந்து நமக்கான கேள்விகளையும் ,பதில்களையும் பெற்றுக்கொண்டோம். வெற்றுககாகிதத்திட்கும்-பாலியக் குழந்தைக்கும், வர்ணங்களுக்கும்- உள்ள பிரேமையைப் போல மொழிகளுக்கப்பாடப்பட்ட - பழஞ்சோற்று வார்த்ததயாடினோம். கடுங்குளிரால் போர்வைகளில் ஒளிந்திருந்த சன்னஙகள் கண்மூடிக் கொண்டன. வெளியே நல்லமழைக் காத்து. கூதிர்கால பின் இரவின் முனங்கத் சத்தம். தவளைகளின் ஒசைக்குறிப்புகள்..... தகரத்தின் பொத்தலுக்குள் மழை நுழைந்த ஜாலச் சந்தம்......... நிலவிருட்டின் அதி உன்னதம்... எல்லாவற்றுக்குள்ளும், அறைக்குள் அல்லோல கல்லோலம்