எ ன்ர வீட்டுக்காரர் முருகன் மாதிரி. முருகன் மாதிரி எண்டா நிறைய விஷயம் உங்களுக்கு நினைப்புக்கு வரலாம்.. ஒண்டு அழகா இருப்பாரெண்டு யூகிக்கலாம்,அது சாடையாக் குறைவு.ரண்டு மனுசியா எண்டுங் கேக்கலாம், அந்தளவு விஷய சாமர்த்தியம் ஆளுக்குக் குறைவு, சும்மா சொல்லப்பிடாது ஆள் நல்ல மனுஷன்,ஆனா முருகன் மாதிரி. சீர்காழி கோவிந்தராஜணும், பித்துக்குளி முருகதாசும் ஒரு காசெட்டில் பாட்டுப்படிச்சிருப்பினம், “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்” எண்டு, ஓம் எங்கண்ட அவரும் அப்பிடித் தான், வீட்ட சிரிச்சா என்ட அலுவலகம் வரைக்கும் எனக்குக் கேக்கும். அண்டய நாள் முழுத்தும் சந்தோஷமா ஜெகஜ்ஜோதியாப் போகும். அதே மாதிரி வீட்ட மனஸ்தாபம் எண்டாலும் அலுவலகம் வரைக்கும் அது வந்து குடையும்;குத்தும்; தலை எல்லாம் இடிச்சு அண்டு முழுக்க ஒரு வேலையும் செய்யேலாமப் போகும். இதால நான் செல்லமா அவரை “முருகா” “முருகா” எண்டு கூப்பிடுவன். அவர் “வள்ளி” “வள்ளி” எண்டு கூப்பிட்டு “அடிக்கள்ளி” எண்டு முத்தாய்ப்பு வெச்சு எங்கண்ட ரோசங்கெட்ட சண்டை இனிதே முடியும். சொன்னாப்போல, ஆளுக்குப் பேரும் க