Skip to main content

Posts

Showing posts from June 13, 2010

ஆளச் சொல்லுகிற ஆட்சிப் பாட்டு

                              அரவச் சடை கழழில் பூட்டி அருவத் துயில் விழியில் கொண்டு அருக்கக் கதிர் அகலம் பரப்பி ஐம்பொன் உன்னை ஆழேன் அருகில்?  இரக்கக் குணம் சிறிதும் இல்லா இன்பப் பொருள் எதிலும் அல்லா மெய்யன் உன்னை மெச்சேன் பொழுதில்? பொய்யன் உன்னை புகழேன் வாதில்? [எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்] வானமே இரு சோலை வான்முகிலும் நாடும் கானமே  ஒரு பாட்டில் கவியரசு செய்யும் ஏனம் ஒரு கிண்ணம் பாலமுது  கொய்து பானமெனப் பருக்கும் சேய் எனது கன்றே ! கண்ட திருக்கோலம் காட்சிப் பிழையின்றி கைகளை தலை மீது தானுயர்த்தி தவிசு பாடி பொய்களை பூசுற போதுமென  அகஞ்சொல்லி அல்லிக் குவளையிவள் ஆதாரமின்றிப் படர்ந்து !  [ஆசிரியத்துறை] வேள்வித் தீயில் வெட்கிக் குனிகையில் ஆவி பெருகி  அங்குமிங்கும் ஒழுகி -ஐயம் இல்லாமல் ஐம்புலனும் கருகி அட்டமா சித்திக்கு அப்பாலும் தாவித் தாவி, தன் நிலைபரம் தவித்து- கடினமடா காத்திருத்தல் காம்போடு வேர் பிடுங்கல்! [ஆசிரியத்துறை]  மெய் நிகர்த்தப் பாடுபட்டு மெய்யாலே விதிர் விதித்து கை நிறையப் பாடும் பட்டு பாழுமோர் பழியைச் சுமந்து "