Skip to main content

Posts

Showing posts from 2010

பிரம்மச்சரியத்தின் பிலாக்கணம்!

                                             இலையுதிர் காலமாதலால் ஒவ்வொரு பௌர்ணிமையிலும் அரச மரங்கள், இலைகளை சட்டை கழற்றுவது போல ஒரு வித சலசலப்புடன் உதிர்த்துக் கொட்டுகிறது ! அல்லது இலையுதிர்காலத்தின் இறுதி மரணந்தழுவும் வெள்ளரசு மரத்தினிலைகள் தெரு நாயொன்று சிரங்கு தாளாமல் உடலை சடசடத்து உலுப்பிக் கொள்வது போல உதிர்த்துக் கொட்டுகிறது ! கீழே போதிசத்துவன் இருந்தான் புகழ் மாலையில் நனைவது போல பழம் இலைகளாலும், இலைகளின் சவங்களாலும், சருகுகளாலும் அபிஷேகிக்கப்பட்டான். அதில் எதோ உத்தமத்தை உணர்ந்தவன், சடத்துவத்தைத் தாண்டி சத்துவத்துக்குள் நுழைந்தான். பிரம்மச்சரியத்தின் அந்தம் பற்றி புல்லுருவியாக வியாபகமாகிக் கொண்டு வருகின்ற படிகளில் என் முன்னேற்றம் தெரிகிறது !  என் அம்மா எனக்குத் தந்த இறுதி அரவணைப்போடு- 'அம்மா' என்கிற காட்சிப்புலமும் , அதன் விஸ்தீரணமும் என் வட்டத்துள் இருந்து தீர்ந்து போயிற்று. இன்று உணரக் கூடியதாயிருக்கிறது, எனக்கான குழந்தைகளுக்காக சேமித்து  வைத்த அன்பு முத்தங்களைப் பரிமா

மலபரிபாகம் !

                                         விரிவாக நான் ஒன்றுமே இன்னமும் எழுதவில்லை. என் எழுத்தில் இருந்து விரவி ஓடும் எச்சில் ஈயைப் போல காலத்தின் முன் சிறு முட்களைப் போல இப்படிப் பல 'போல'  வாக நீ தள்ளி ஓடுகிறாய். காப்பிய மானத்தைப் பற்றி அக்கறை கொண்டவனாக நீ இருக்கையில், அதில் பாதி காப்பாற்றிய மானமாவது எனக்கிருக்கக் கூடாதா? இல்லை, இருக்கக் கூடாது. அகம்பாவத்தின் அடிச் செருக்கு நீ, உனக்கேற்றாட் போல உன் மான விபரத்தைக் கூட்டிக் குறைக்கிற பொறுப்பு உன்னிடமில்லை. எந்தவொரு உயிரின் மீது நீ அளவு கடந்த பாசத்தை வைக்கிறாயோ, அந்த நொடி முதல் நீ  மனதாலும் உடலாலும், சமூகத்தாலும் பலவீனனாகிறாய். ஆக நீ கோழையாகி விட்டாய். 'குரு தேவா, நான் மலபரிபாகம் பால் ஆட்கொள்ளப் பட்டவள் என்பதை நீங்கள் தானே சொல்லியிருந்தீர்கள்?'  .....ஹஹ் பூ.....மலபரிபாகமா, நேற்று முதல் நீ அப்படியிருந்திருக்கலாம்,இன்று கடிகார முள்ளைப் பார்த்தாயா, காலத்தின் நிகண்டில் குத்திட்டு நிற்கிறது. ஒருகாலமும் முடியாது,உன்னால் ஒரு காலமும் முடியாது....! ஆக்ரோஷமாய்க் கத்தினார். மலம் என்று சிறப

கடவுள் பற்றி வாழ்தல் ............

                                                                                                    ....அம்மா, அந்த அனிச்சம் பூ பூக்குமாம்மா?....... பூக்கும் ராசாத்தி.......... 'எப்பம்மா பூக்கும்? .......... ...    மழை நிறையப் பெஞ்சு, காத்தும் சூரிய ஒளியும் தாராளமாக் கிடைக்கிரண்டைக்குப் பூக்கும். ......... "இன் சபிசியன்ட்"   பூட்ஸ் அப்பிடித்தானேம்மா ? ம்ம்ம்........ '' ஏண்டா,  தேவ மகனே , இந்த அனிச்ச மரம் எப்ப பூக்கும்? ......... 'தெரியேல்ல'.............., அது பூத்த அண்டைக்கு அதைப் பிச்சு எனக்குத் தருவியளா? ........... .........இல்லை....., மாட்டன். 'ஏன்? ............. அதை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. ......சரி, அணிச்சம்பூவைப் பிச்சுத் தரவேண்டாம்.அது எப்ப பூக்குதெண்டு பாத்தியள் எண்டா எனக்குச் சொல்லுவியலா? ......... 'இல்லை...., மாட்டன். 'உங்களுக்கு, 'இல்லை'யையும் 'மாட்டனை'யும் தவிர தமிழில வேற ஒன்டுமும் தெரியாதா? .......???? ...........தெரியுமே, திருப்புகழும், த

நிலையாமை என்றும் !

ஒரு கோடி இயலாமை நிலையாமை ஆகும் அது கூடி தணியாமை தவிக்காமல்ப் போகும் சில கேள்வி சிதையாமல் நெடு நாளை வாழும் சிதைவோடு செல்வார்க்கு செல்வாக்கும் கூடும் சில நாளில் இவையாவும் சிதையாமல் வாழும் சிதையாமல் வாழ்வாகில் சிந்தாமல் ஓயும் ஓயாத ஓசைக்கு ஒலியென்று ஓசை பேசாத சொல்லுக்கு வெறும் என்று பாசை வெறுமென்று ஆனாலே வெளி வேடத் தொல்லை  தொலையாது ஒழிந்தோடி என்னென்ன லாபம் என்னான காலத்தில் ஒழிந்தென்ன பாவம் பருவோடு பயிலாமை மனதார வாழ்த்தும் பயமோடு பல தாரம் பருகாமை கூடும் கொடியோடு மலர் கொண்டு கொடும்பாவி ஆடும் அடியோடு மலராகி அரும்பாகி வாழும் அரும்பாகி அவையாவும் அல்லாது போகும் கரும்பாகும் எண்ணங்கள் கல்லாகிப் போகும் ஒரு வேளை உயிர் வந்து ஓயாமல் உருகும் அது காலை அலை வந்து கடலோடும் போகும் கலையாமை கனவென்று கடிதாரம் பேசும் கடிகாரம் பேசாத கனவென்ன ஆகும் கனவென்று ஆகாமல் கலையாதும் போகும் கலையாத கனவுக்குள் கலை ஒன்று ஆடும் கலையொன்று ஆடாமல் கலைந்தெங்கு போகும் கலைந்தங்கு போனாலும் கனவோடு வாழும் பொய்யாகிப் போகாத பொருள் ஒன்றும் இல்லை பொய்யாகிப் போனாலே பொருள் அங்

கண்ணன் பாடல்

சொன்ன பொருளிலெலாம் கண்ணா சேதி சொல்ல மறந்தாயோ ! - சேதி-சொன்ன பொருளிலெல்லாம் கண்ணா மீதி சொல்ல மறந்தாயோ- மீதி- சொல்லியிருந்தும் கண்ணா பாதி சொல்லினை மறந்தாயோ- பாதி-சொல்லிலும் ஒரு சொல் சொல்லாமல் நின்றாயோ- சொல்லாமல் நின்றதினால் சோதி என்று ஆனாயோ- சோதி என்று ஆனவனே சேதி ஒன்று தாராயோ ? கேள்வி உன்னைக் கேட்பதற்கே வேள்வி பலம் தாராயோ - வேள்வி நிதம் செய்வதற்கே தோளில் பலம் தாராயோ- தோளில் பலம் சேர்த்து விட்டு தோல்வியினைச் சேர்ப்பாயோ- தோல்வியினைத் தோள் கொடுக்க துன்பமினைத் தருவாயோ- துன்பமிதைச் சேர்த்துவைக்க தொல்லையினைத் தாராயோ- தொல்லைகளின் தொன் முடிவில் உன் புன் முகத்தைத் காட்டாயோ- தோல்வி ஒன்று கண்ணா நீ என் தோளில் வந்து ஏற்றாதே- ஆழி பயில் மன்னா நீ என் காலில் பழி சேர்க்காதே - வாலிபத்தை ஒரு வழியாய் வலி நிறைத்து விற்காதே- உன் விற்பனையை விஞ்சுமொரு விலை மதிப்பைச் செய்யாதே- விலை போவார்க் குலமொழுக கொஞ்சும் படி நிற்காதே- தானாய்க் -கொஞ்சுமொரு அஞ்சுகத்தைக் கச்சவிழத் தள்ளாதே ! தேளை விட்டுத் தேன் பருக, சாலை விட்டுத் தேர் விலக காளை விட்டுப்போன பின்னே புதுப

இஞ்சித் தேத்தண்ணியும் குருட்டுப் பட்சியும்...

                                                            படபடவென்று, இறக்கையை அடித்துக் கொண்டு அந்தரத்தில் துடிக்கின்ற அந்த இரவுப் பட்சி, இரவின் கவிந்து போன நரையை ரசிகத் தன்மைக்கு அப்பாலே எட்ட நின்று பார்க்கிறது- இருந்தும் கூடக்குறைய அதன் மையப்புள்ளிக்குள் அதனால் இறங்கமுடியவில்லை. நான் சாய்வு நாற்காலியைத்  தேர்ந்தெடுத்து, ஆயாசமாக உட்கார்ந்து கொண்டு இஞ்சித் தேத்தண்ணியை ருசிக்கிறேன். எனக்கு எல்லாவற்றிலும் ரசனையுண்டு. அந்த மாமரத்தில், தளிர் வரத்தொடங்கி நாளாகீற்று- மாம்பூ பூத்துக் குலுங்கும் குடலையின் உன்னத வாசம்...! அன்றைய மாலை, இருண்டு போன சூரியனின் அழைப்பை மீறி வௌவால்களை மரத்துக்கு அழைக்கிறது. எங்கிருந்தோ நெடிய வீச்சத்துடன் வரும் பீத்தோவனின் மேற்கத்தைய இசையொன்றோடு என் இஞ்சித் தேத்தண்ணியும் தீர்ந்து போகிறது. தீர்ந்து போன படியினால், இன்னொரு நாள் இஞ்சித் தேத்தண்ணியைக் குடிக்கமாட்டேன் என்றதிலை. என் சுரனையில்லாத் தனம் என் போலவே என்னையும் ஏமாற்றிக் கொண்டிருந்தது.  அந்த இராப் பட்சி, இன்னமும் இறக்கையை அடித்து ஓயவ

அப்பா சொல்லித்தந்த இசை....

         நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமானதொன்றைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளவேண்டிய ஆசை எழுந்தது.ஆசைகள் எழுவது பற்றி எனக்குக் கூறுவதற்கு எந்தவிதமான தன்னிலைவாதமும் இல்லாவிட்டாலும், எழுந்தமானமான ஆசைகள் பற்றி நினைக்கையில் ஒரு வகையில் சிறு புன்னகையும் எழும். நேரம், அது விட்டுச்செல்லும் இடைவெளிகள்,காலம், அது பதிந்து போன தடயங்கள் இவை எல்லாம் சார்ந்ததாக மனிதனது தேடல்களும், தேவைகளும் நீண்டு கொண்டும், குறுகிக் கொண்டும் போகும். நான் தற்போது தத்துவார்த்தமான சூழ்நிலை பற்றி கிஞ்சித்தும் கதைக்கக் கூடாதென்ற நிலையில் இருக்கிறேன். ஆனமான நினைவு கூறத்தக்க மனோபாவங்கள் ரம்மியமாக இருந்த பொழுதுகளிலான இசையுடன் என் பயணங்கள் பற்றிக் கதைக்கலாம் என்றிருக்கிறேன்.  இசை, இசை ......இசை பட வாழ்ந்த என் நாட்கள் பற்றிக் கதைக்கப் போனால் நிறைய ...இசை என்பது ஓவ்வோருவருக்கும் ஒரு பிரயத்தனம். ஒரு அழகிய மொழி, பேசப்படுதலுக்கும் ,உணரப்படுதளுக்குமிடையேயான புரிதல், சந்தம், ஓசைகளின் கலவை, இன்னும் பிற பிற... என்னைப் பொறுத்தவரை நிகழ்வுகளின் பிரதிபலிப்பு ! என் இசையின் தெரிவு குறித்தே என் நிகழ்வுகளும்,